சுகாதாரத்துறையினர், காவல் அதிகாரிகள் மீது கல்வீசி தாக்குதல்.. பதைபதைப்பு வீடியோ காட்சிகள்.!!
Uttar predesh police and medical officers attacked by peoples during quarantine
இந்தியாவின் உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள மொராதாபாத் பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தேவையான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு இருந்துள்ளனர். மேலும், இந்த பகுதியில் உள்ள ஒரு நபருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இவர்களை தனிமைப்படுத்தும் பணி மற்றும் அக்கம் பக்கத்து வீட்டார்களை தனிமைப்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளனர்.
இங்குள்ள மக்கள் காவல் துறை அதிகாரிகள் மற்றும் அவசர ஊர்தி ஊழியர்களின் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளானது வெளியாகியுள்ளது. இந்த விஷயத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்த அறிவுரை கூறச் சென்ற காவல் துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் தாக்கப்பட்டது பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Uttar predesh police and medical officers attacked by peoples during quarantine