நடுரோட்டில் இரும்பு ராடால் தாக்கி வாலிபர் கொடூர கொலை... வெளியான பதைபதைப்பு வீடியோ காட்சிகள்.! - Seithipunal
Seithipunal


நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில், இளைஞர் ஒருவரும் அடித்துக் கொலை செய்யப்படும் பரபரப்பு வீடியோ காட்சியானது இணையத்தில் வெளியாகியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் அஜய். இவரது சகோதரர் சஞ்சய். சஞ்சய்க்கும், அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த விஷயம் தொடர்பாக அஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், இந்த புகாரை எதிர்த்து ஆத்திரமடைந்த கோவிந்தன், தனது நண்பர்களுடன் அஜய்யை நடுரோட்டில் இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்துள்ளார். 

இந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் வேடிக்கை பார்த்த நிலையில், இந்த சம்பவம் நடைபெற்று முடிந்ததும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அஜய்யை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூட வழியில்லாமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காசியாபாத் நகர் காவல் துறையினர், அஜய்யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கோவிந்தன் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh Youngster Murder on Road Shocking Video Leaked


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->