சொல்ல சொல்ல கேட்காமல் கணவர் செய்த செயல்.. நாக்கை கடித்து துண்டித்த மனைவி.!
Uttar Pradesh Women bite Husband Tounge
உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு மனைவி தன் கணவனின் நாக்கை கடித்து துப்பிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் லக்னோ பகுதியில் சல்மா என்ற பெண் தனது கணவருடன் வசித்து வந்த நிலையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. எனவே, கோபித்துக் கொண்டு சல்மா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது கணவர் முன்னா தனது மனைவியை பார்க்க மாமியார் வீட்டிற்கு சென்றார். ஆனால், எதற்கு பார்க்க வந்தீர்கள் என்று சல்மா அவருடன் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சல்மா ஆத்திரமடைந்து கணவரின் நாக்கை கடித்துள்ளார் இதில் அவருடைய நாக்கு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கணவர் முன்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி போலீசார் தகவல் அறிந்து வந்து முன்னாவிடம் விசாரித்துவிட்டு மனைவி சல்மாவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Uttar Pradesh Women bite Husband Tounge