அக்கா, தங்கையான 3 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்?.. 2 பேர் மரணம்.. வெளியான பதைபதைப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தினை சார்ந்த 3 சகோதரிகள், மாட்டிற்கு தீவனம் வாங்க புதன்கிழமை மதியம் கடைவீதிக்கு சென்றுள்ளனர். பின்னர் மாலை நீண்ட நேரம் ஆகியும் சிறுமிகள் வீட்டிற்கு திரும்பவில்லை. 

இதனால் பதற்றமடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிறுமிகள் 3 பேரையும் அங்குள்ள பகுதிகளில் தேடியுள்ளனர். இதன்போது, சிறுமிகள் மூவரும் தங்களின் துப்பட்டாவால் வாயில் கட்டப்பட்ட நிலையில், அவர்களுக்கு சொந்தமான வயலில் கிடப்பதை கண்டுள்ளனர். 

2 சிறுமிகள் உயிரிழந்து இருந்த நிலையில், ஒருவர் உயிருக்கு போராடியுள்ளார். இவரை மீட்டு கான்பூர் மருத்துவமனையில் அனுமதி செய்தனர். சிறுமிகள் மூவரும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 

இவர்கள் மூவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியான நிலையில், இவர்களுக்கு 13, 16 மற்றும் 17 வயது என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் அறிந்து சென்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காமுகன்களை தேடி வருகின்றனர். இவர்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh Unnao 2 Child girls sexual abuse and Murdered 1 girl Admit Hospital Serious condition


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->