தலைகாட்டாத பாஜக ச.ம.உ..! கிராமத்தின் அவல நிலையை உணர்த்த கழிவுநீரில் நடக்க வைத்த மக்கள்.! - Seithipunal
Seithipunal


கிராமத்தின் அவல நிலையை உணர்த்த பாஜக எம்.எல்.ஏவை பொதுமக்கள் கழிவுநீரில் நடக்க வைத்த சம்பவம் நடந்துள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருப்பதால் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பலரும், தற்போது மீண்டும் தொகுதி மக்களை சுறுசுறுப்புடன் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹபூர் தொகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ கமல் மாலிக், தனது தொகுதிக்கு உட்பட்ட தோல்பூர் என்ற கிராமத்திற்கு பாதயாத்திரையாக சென்றுள்ளார். 

இதன் போது, அவரை முற்றுகையிட்ட கிராமத்தினர் தங்களது கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும், வெற்றி பெற்றதில் இருந்து தற்போது வரை ஒரு நாள் கூட வந்து எங்களை பார்க்கவில்லை. தொகுதிக்கு தேவையான எந்த வசதியையும் செய்து கொடுக்கவில்லை., தற்போது என்ன இங்கு விசயமாக வந்துள்ளீர்கள்? என்று கேள்வி எழுப்பினர். 

மேலும், தங்களது கிராமத்தின் அவல நிலையை உணர்த்த, வீதியில் தேங்கியிருந்த கழிவுநீரில் அவரை செருப்பில்லாமல் நடந்து போகச் சொல்லி, அவரது செருப்பை கழட்டி தூக்கி எறிந்தனர். இதையடுத்து, விபரீதத்தை உணர்ந்த எம்.எல்.ஏ கமல் மாலிக் வெறும் காலால் கழிவுநீரில் நடந்து சென்றார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh MLA Kamal Malik Walk Sewage Water Peoples Force to realize the plight of the village.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->