கோவிட் வார்டில் சரக்கடிக்க முடியல.. குடிகாரனின் விபரீத முடிவு.. அரங்கேறிய சோகம்.!!
Uttar Pradesh man attempt suicide Quarantine hospital due to Liquor addicted
ராம்பூரில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்த நபர் மது அருந்த இயலாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சோகம் அரங்கேறியுள்ளது.
இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ராம்பூர் பகுதியை சார்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவரை அங்குள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சுகாதாரத்துறையினர் அனுமதி செய்துள்ளனர்.
இந்த நபருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்த நிலையில், தனிமைப்படுத்தப்படுத்தல் மற்றும் காவல்துறை பாதுகாப்பு காரணமாக மது அருந்த இயலாமல் தவித்து வந்துள்ளார். இதனால் கடந்த இரண்டு நாட்களாக விரக்தியில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மருத்துவமனையின் மூன்றாவது மாடிக்கு சென்ற நபர், அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரது உடலை மீட்ட காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Uttar Pradesh man attempt suicide Quarantine hospital due to Liquor addicted