திருமணத்திற்கு வற்புறுத்திய கள்ளக்காதலி.. உல்லாசமாக இருந்துவிட்டு அரங்கேறிய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியை சார்ந்தவர் இஸ்மாயில். இவர் தாசனா பகுதியில் 5 வருடமாக கிளினிக் வைத்து நடத்தி வரும் நிலையில், 33 வயது பெண்மணி இவரது கிளினிக்கிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அந்த பெண்மணிக்கு 4 குழந்தைகள் உள்ள நிலையில், இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதியன்று பெண்மணி மாயமாகிவிட்டதாக, அவரின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி குருஷேத்ரா காவல் துறையினர் காசியாபாத் காவல் துறையினருக்கு தொடர்பு கொண்டு அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து காவல் துறையினர் விரைந்து செல்கையில் மாயமான பெண் என்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து இஸ்மாயிலை சந்தேகத்தின் கீழ் மேற்கொண்ட விசாரணையில், அவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து குழந்தைகள் இருந்ததும், கள்ளத்தொடர்பால் பெண் திருமணத்திற்கு உறுதியாக இருந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்மாயில் பெண்ணை கொலை செய்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh illegal affair couple murder by affair boy body recovered


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->