பெண் நோயாளிக்கு மருத்துவரால் அரங்கேறிய சம்பவம்.! வார்டு பாயுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை.!  - Seithipunal
Seithipunal


நெஞ்சுவலிக்கு சிகிச்சைக்கு சென்ற பெண்ணை மருத்துவரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

உத்திரபிரதேச மாநிலம் லக்னோ பகுதியில் மகாநகர் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் நெஞ்சு வலி ஏற்பட்டு ஒரு பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு சென்ற மருத்துவர் அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்தார்.

அவருக்கு உடந்தையாக வார்டு பாயும் இருந்தார். பெண் மயக்கம் அடைந்த பின்னர் மருத்துவமனை அறையிலேயே வைத்து இருவரும் சேர்ந்து அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மயக்கம் தெளிந்த பின் அந்த பெண்ணுக்கு விஷயம் தெரிய வர அவர் உடனடியாக போலீஸிடம் சென்று தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு மருத்துவர் மற்றும் வார்டு பாய் இருவரையும் கைது செய்துள்ளனர். உடல் நலத்தை காப்பதற்காக மருத்துவமனைக்கு சென்ற பெண்ணை மருத்துவர் இப்படி திட்டம் திட்டி பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh hospital Doctor raped patient


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->