50 க்கும் மேற்பட்ட சிறார்கள்.. 10 வருடம்.. கைதான தம்பதிகள்.!
Uttar Pradesh Govt officer arrest child abuse case
50 க்கும் மேற்பட்ட குழந்தைகளை, கடந்த 10 வருடங்களில் பாலியல் பலாத்காரம் செய்ததாக உத்திரபிரதேச அரசு பொறியாளரின் மனைவியை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும், அவர் நீதிமன்ற காவலில் ஜனவரி 4 ஆம் தேதி வரை வைக்கப்பட்டுள்ளார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தை சார்ந்த ராம்பவான் என்பவர், அரசு பொறியாளராக இருந்து வருகிறார். இவர், கடந்த சில மாதத்திற்கு முன்னதாக சிறுவர் பாலியல் பலாத்காரம் மற்றும் சிறார் ஆபாச புகைப்படங்கள், விடியோக்கள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதானார்.
இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 5 வயது முதல் 16 வயது வரை இருந்துள்ளனர். ராம்பவானின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 8 அலைபேசிகள், ரூ.8 இலட்சம் ரொக்கம் மற்றும் மடிக்கணினி போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளது. இதில், சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிய வீடியோ கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டினருடன் இவர்கள் விடியோவை பகிர்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Uttar Pradesh Govt officer arrest child abuse case