காதல் போர்வையில், காருக்குள் பெண் 6 பேரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. வழக்கால் வாழ்க்கை கொடுத்த நபர்.!
Uttar Pradesh girl Sexual abuse by 6 Members by Love Trap Married one person due to Complaint
இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மொராதாபாத் அமரேஹா பகுதியை சார்ந்த 20 வயது பெண்மணி, தனது பக்கத்து வீட்டு இளைஞரான முஜீப் அகமது என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் காதலராக பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதியன்று முஜீப் அகமதுவுடன் பெண்மணி தனிமையான இடத்திற்கு சென்றுள்ளார். இதன்போது, காரில் முஜீப் அகமது, முஜீபின் நண்பர்களான ஜாக்கி பாஷா, வசீம், அனஸ் பாஷா மற்றும் ஜாம்ஷெட், ஹஸீப் ஆகியோர் இருந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் சேர்ந்து பெண்மணியை காரில் வைத்தே கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை விடியோவாகவும் பதிவு செய்து, பெண்மணியை சாலையில் தூக்கியெறிந்துவிட்டு சென்றுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி செய்வதறியாது திகைக்கவே, இதனை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்மணி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆறு பேரில் ஒரு நபர் பெண்ணையே திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் அங்குள்ள சமூக வலைத்தளத்தில் வெளியாகி, காவல் துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Uttar Pradesh girl Sexual abuse by 6 Members by Love Trap Married one person due to Complaint