கடனை அடைக்க முடியாமல், மகளை ரூ.2 இலட்சத்திற்கு விற்பனை செய்த தந்தை.!
Uttar Pradesh girl sales by Father due to Could not return Loan 19 Feb 2021
உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பரத்தாப்பூர் பகுதியை சார்ந்த பெண், தன்னை ரூ.2 இலட்சத்திற்கு விற்பனை செய்ததாக கூறி காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். மேலும், தன்னை விற்பனை செய்ய வேண்டாம் என்று கூறியதால், தனது தாய் தந்தை தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கையில், சதாப்தி நகர் பகுதியை சார்ந்த லாரி ஓட்டுநர் ஏற்கனவே பல வழக்குகளில் சிறையில் இருந்து வந்த நிலையில், பராஅத் மாவட்டத்தை சார்ந்தவரிடம் ரூ.2 இலட்சம் கடன் வாங்கியுள்ளார்.
அந்த கடனை கொடுக்க முடியாமல் திணறி, இறுதியாக மகளை ரூ.2 இலட்சத்திற்கு விற்பனை செய்தது அம்பலமானது. பெண்ணை வாங்கிய காமுகன் பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், அவனது பிடியில் இருந்து தப்பி மீண்டும் பெற்றோரின் இல்லத்திற்கே வந்துள்ளார். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Uttar Pradesh girl sales by Father due to Could not return Loan 19 Feb 2021