காதலிக்க மறுப்பு தெரிவித்த சிறுமி, அவரின் தங்கைகள் மீது ஆசிட் வீச்சு.. காமுகனை சுட்டுப்பிடித்த போலீஸ்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பஸ்கா கிராமத்தில் தம்பதிகள் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 17 வயது, 12 வயது மற்றும் 8 வயது என மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மூவரும் நேற்று அதிகாலை நேரத்தில் இல்லத்தில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். 

இந்நிலையில், இவர்களின் இல்லத்துக்கு வருகை தந்த ஆஷிஷ் என்ற கொடூரன், மூவரின் மீதும் ஆசிட்டை வீசியுள்ளான். இதனால் 17 வயது கொண்ட மூத்த சகோதரிக்கு கண்கள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு பேருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுமிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த குற்றத்தில் ஈடுபட்ட ஆஷிஷ் என்ற கொடூரனை சுட்டு பிடித்துள்ளனர். 

இந்த கொடூரன் மூத்த சகோதரியை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், இந்த காதலிற்கு சிறுமி மறுப்பு தெரிவித்து வந்ததால் ஆசிட் வீசிய சமப்வம் அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh girl love torture acid attack


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->