மகளின் தலையை துண்டாக்கி வீதியில் ஊர்வலம்.. காவல்துறையினரை அதிர்ச்சியாக்கிய பகீர் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


மகளை தலை துண்டித்து கொலை செய்து, தலையோடு காவல் நிலையத்திற்கு வந்த சம்பவம் நடந்துள்ளது. 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பண்டேதாரா கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வேஷ் குமார். இவருக்கு 18 வயதுடைய மகள் ஒருவர் இருக்கிறார். இவர் கல்லூரியில் பயின்று வந்த நிலையில், காதலில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இவரின் காதல் விவகாரம் தந்தைக்கு தெரியவரவே, சர்வேஷ் குமார் இதனை கண்டித்து உள்ளார். ஆனால், தந்தையின் கருத்துக்களை ஏற்க மறுத்த மாணவி காதலில் உறுதியாக இருந்த நிலையில், ஆத்திரமடைந்த சர்வேஷ் குமார் தனது மகளை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

 

மேலும், வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் மகளை கழுத்தை அறுத்து கொலை செய்த நிலையில், தலையை துண்டித்து கையோடு எடுத்து ஊர்வலம் சென்று காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார். தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சர்வேஷ் குமார் செல்வதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 

பின்னர், காவல் துறையினர் சர்வேஷ் குமாரிடம் விசாரணை செய்து, வீட்டிற்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh Father Murdered Daughter due to Love Issue Police Investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->