ஜீன்ஸ் அணிந்த ஒரே காரணத்திற்காக 17 வயது சிறுமியை கொடூரமாக அடித்து கொலை செய்த உறவினர்கள்.!
Uttar Pradesh Deoria District 17 Aged Girl Murder Wear Jeans by Relations
ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்த சிறுமியை உறவினர்கள் அடித்துக்கொலை செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள தியோரியா (Deoria) மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சார்ந்தவர் அமர்நாத் பஸ்வான். இவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 17 வயது மகள் உள்ளனர்.
இந்நிலையில், லூர்தியானாவில் பணியாற்றி வந்த அமர்நாத் பஸ்வான், கிடைத்த சில நாட்கள் விடுமுறையை சொந்த ஊரில் சென்று கொண்டாட முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, தனது மனைவி மற்றும் மகளுடன் சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது, சிறுமி ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்த நிலையில், அங்கிருந்த சிறுமியின் உறவினர்கள் ஜீன்ஸ் பேண்ட் அணிய கூடாது என்றும், இந்திய கலாச்சார உடைகள் அணிய வேண்டுமென்று கூறியுள்ளனர். இதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த உறவினர்கள் சிறுமியை சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளனர். மேலும், சிறுமியை சுவற்றில் மோத வைத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர், அவரது உடலை அங்குள்ள மேம்பாலத்திற்கு எடுத்து வீசிவிட்டு வந்துள்ளனர்.
சிறுமியின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்த சிலர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பான விசாரணை செய்து, சிறுமியின் தாத்தா மற்றும் ஆட்டோ ஓட்டுனரை கைது செய்தனர். பிற உறவினர்களையும் தேடி வருகின்றனர்.
இவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் உண்மையில் ஜீன்ஸ் பேண்ட் சிறுமி அணிந்திருந்ததால் கொலை நடந்ததா? அல்லது அமர்நாத்தின் சொத்துக்கு ஆசைப்பட்டு சிறுமியை கொலை செய்தனரா? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
English Summary
Uttar Pradesh Deoria District 17 Aged Girl Murder Wear Jeans by Relations