பிரிந்து வாழ்ந்த தம்பதிகள்.. மனைவியிடம் மாதம் ரூ.1000 பெற கணவன் செய்த சம்பவம்.!
Uttar Pradesh Court Judgement about Pension for Separate Live Husband
உத்திர பிரதேசம் மாநிலத்தில் குடும்ப நலவழக்கில், பிரிந்து வாழ்ந்து வரும் கணவருக்கு மாதம் ரூ.1000 வழங்க வேண்டும் என்று அரசு ஓய்வூதியம் பெரும் மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தை சார்ந்த கணவன் - மனைவி, பல வருடங்களாக குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதியில் மனைவி அரசாங்க அதிகாரி என்பதால், அவருக்கு ஓய்வூதியம் வருகிறது.
இந்நிலையில், தனது பராமரிப்பு செலவுகளுக்கு மனைவியிடம் இருந்து மாதம்தோறும் பணம் வழங்க வேண்டும் என்று கணவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மேலும், இந்து திருமண சட்டம் 1995 கீழ் குடும்ப நலநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை ஏற்று ஓய்வு பெற்ற அரசு ஊழியராக இருக்கும் மனைவி மாதம் தோறும் பெரும் ரூ.12 ஆயிரம் ஓய்வூதியத்தில், கணவரின் பராமரிப்பிற்கு ரூ.1000 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Uttar Pradesh Court Judgement about Pension for Separate Live Husband