சங்கு ஊதி புகை போட்டா கொரோனா போயிடும்.. பாஜக சப்போர்ட்டர் சம்பவம்.!
uttar pradesh bjp activist crazy move
உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் பாஜக தலைவர் கோபால் ஷர்மா, தனது ஆதரவாளர்களுடன் தள்ளுவண்டியில் புனித புகை என்ற பெயரில் புகை வண்டியை தள்ளிக்கொண்டு செல்கிறார். புனித புகை உடன் சங்கை ஊதிக்கொண்டு மீரட் நகரின் பிரதான வீதிகளில் செல்கிறார்.
இந்த விஷயம் தொடர்பான வீடியோ வெளியாகி சமுக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வீடியோ குறித்து கோபால் ஷர்மா பேசுகையில், புனித புகை காற்றில் பரவினால் கொரோனா தொற்று ஒழியும்.
வளிமண்டலத்தில் இருக்கும் கொரோனா கிருமிகளை புனித புகை கொள்கிறது. புனித புகை, சங்கு சத்தம் ஆக்சிஜனை அதிகரிக்கிறது. மக்கள் கொரோனா நோயில் இருந்து மீள்வார்கள் " என்று தெரிவித்தார். சமீபத்தில், மாட்டு கோமியம் குடிக்கிறேன், எனக்கு தற்போது வரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
uttar pradesh bjp activist crazy move