கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஆற்றில் தூக்கி வீசிய உறவினர்கள் - வெளியான பரபரப்பு வீடியோ.! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பல்ராம்பூர் மாவட்டத்தில் பி.பி.இ மருத்துவ உடையணிந்த நபர் மற்றும் அவருடன் இருந்த மற்றொருவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபரின் சடலத்தை பாலத்தில் இருந்து ஆற்றில் தூக்கி வீசும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

பாலம் வழியாக வாகனத்தில் சென்றவர், எதற்ச்சையாக இந்த விடியோவை பதிவு செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகவே, இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விஷயம் தொடர்பாக பல்ராம்பூர் தலைமை மருத்துவ அதிகாரி விஜய் பகதூர் சிங் தெரிவிக்கையில், " ஆற்றில் வீசப்பட்ட உடலின் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தார்த் நகர் மாவட்ட பகுதியை சார்ந்த பிரேம் நாந் மிஸ்ரா ஆவார். 

இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கடந்த மே 25 ஆம் தேதி உறுதி செய்யப்பட்ட நிலையில், மே 28 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உரிய கொரோனா வழிகாட்டு நெறிமுறையுடன் குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்கள் இப்படிப்பட்ட காரியத்தை செய்துள்ளார்கள் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh Balrampur Corona Death Patient Troughed River


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->