கணவன் இருந்தும், காதலனை நம்பி விபரீத முடிவெடுத்த பெண் காவல் அதிகாரி.. இறுதியில் ஏமாற்றம்.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாகபத் பகுதியை சார்ந்த 25 வயது பெண்மணி காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், பெண் காவல் அதிகாரிக்கு, தன்னுடன் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து காவல் அதிகாரிகள் இருவரும் காவல் நிலையத்தில் தங்களின் காதலை வளர்த்து வந்துள்ளனர். இதன்பின்னர், உனது கணவரை விவாகரத்து செய்து வந்தால் தான் இனிமேல் காதல் செய்வேன் என்று காவல் அதிகாரி கூறவே, கள்ளக்காதலில் உறுதியாக இருந்த அதிகாரி கணவரை விவாகரத்து செய்யவும் திட்டமிட்டுள்ளார். 

மேலும், திருமண ஆசை காட்டி பெண் காவல் அதிகாரியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் விவாகரத்தும் கிடைத்த நிலையில், திருமணம் குறித்து பெண் பேசியுள்ளார். திருமணம் குறித்து பேசும் போதெல்லாம் காவல் அதிகாரி ஏதேதோ காரணங்கள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு திருமணத்தை தட்டிக்கழித்துள்ளார். 

இந்நிலையில், ஒருநாள் இவர்களுக்குள் சண்டை எழவே, இருவரும் சண்டையிட்டுள்ளனர். மேலும், விரக்தியில் பெண் காவல் அதிகாரி விஷம் குறிக்க முயற்சிக்கவே, அவரின் தோழிகள் பெண் காவல் அதிகாரியை காப்பாற்றியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக பெண் காவல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh Affair Police Cop Cheated by Another Police Officer


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->