படுக்கையறை கட்டிலில் உல்லாசமாக இருந்த பாம்புகள்..! உள்ளே சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட கொடூரம்.!!
up woman sits on snakes
உத்தரபிரதேச மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தில் வசித்து வந்த கீதா எனும் பெண்ணின் கணவன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், கணவர் வெளிநாட்டில் இருப்பதால் அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, கணவனிடம் மெய்ம்மறந்து பேசிக் கொண்டிருந்த கீதா, மேலும், அவரை சுற்றி என்ன நடக்கிறது என கவனிக்காமல் நேராக படுக்கை அறைக்கு சென்று படுக்கையில் அமர்ந்துள்ளார்.
அப்போது படுக்கையின் மீது இரு பாம்புகள் இனப்பெருக்கம் செய்துகொண்டு இருந்தனர். அத்தருணத்தில் கீதா படுக்கையில் அமர்ந்ததால் இரண்டு பாம்புகளும் கீதாவை சரமாரியாக கடித்தது. கீதாவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடுவந்து பார்த்தபோது கீதா பாம்புகள் கடித்து மயக்க நிலையில் இருந்தார்.
உடனடியாக கீதாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அனால் கீதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் கீதாவின் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக பாம்பு இருக்கும் இடத்தை கண்டறிந்து இரண்டு பாம்பையும் அடித்துக் கொன்று விட்டனர்.