மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்த மத்திய நிதியமைச்சர்.!!
union finance minister says about bank loan
கொரோனா வைரசால் இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் குறைந்தது. இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டு எடுக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்தார். நிபுணர்களின் ஆலோசனைபடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பொருளாதாரத்தை வலுப்படுத்த ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள்.
வங்கி கடன்களுக்கான மாத தவணை செலுத்த 6 மாத அவகாசம். மக்கள் கையில் பணம் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பிரதமரின் கூற்று படி மக்கள் உயிரை காப்பதே பிரதானம், பொருளாதாரம் 2ம் பட்சம் தான்.
ரூ. 20 லட்சம் கோடிக்கான திட்டங்களை விரிவாக பட்டியலிட்டுள்ளோம். நிபுணர்களின் ஆலோசனைபடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
English Summary
union finance minister says about bank loan