பொது போக்குவரத்திற்கு அதிரடி தடை.. முதல்வர் பரபரப்பு எச்சரிக்கை.!!
uddhav thackeray warn about to cancel public transport
உலகையே பெரும் அச்சறுத்தலுக்கு மத்தியில் உள்ளாக்கியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவின் டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலத்தில் பரவியுள்ள கரோனாவிற்கு 3 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் மருத்துவமனையில் அனுமதியகுமாறு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்த வரையில் தேவையான முன்னெச்சரிக்கை நடைபெற்று வரும் நிலையில், மும்பை நகரின் பிரபலமான விநாயகர் கோவில், மும்பாதேவி கோவில், மகாலட்சுமி கோவில் போன்றவை வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படுகிறது.
அம்மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களை சந்திக்கையில், அவசியம் இல்லாத பயணத்தை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், பேருந்து, இரயில் மற்றும் ஆட்டோ, டாக்சி போன்றவற்றிற்கு இன்னும் தடை விதிக்கப்படவில்லை. நிலைமை கைமீறும் பட்சத்தில் அனைத்து போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்படலாம் என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
uddhav thackeray warn about to cancel public transport