#கேரளா || இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து.! காவலர் ஒருவர் உயிரிழப்பு.!
Twowheeler private bus accident in Kerala
கேரளாவில் இரு சக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் காவலர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து மலப்புறம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து குற்றிப்புறம் பகுதியின் அருகே சாலை வளைவில் வேகமாக திரும்பியதால், முன் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
ஓட்டுனரின் கவனக் குறைவால் ஏற்பட்ட விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற குன்னங்குளம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் பிஜீ தூக்கி வீசப்பட்டு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், பிஜீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சியின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Twowheeler private bus accident in Kerala