கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது.! ஜம்மு காவல்துறையினர் நடவடிக்கை.!
Two persons arrested for possession of cannab
ஜம்முவில் கஞ்சா வைத்திருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜம்முவில் ராஜீவ் நகரில் உள்ள நர்வால் பகுதியில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது சந்தேகத்தின் பேரில் இருவரிடம் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்களிடமிருந்த 4 கிலோ கஞ்சா மற்றும் 4 லட்சத்து 49 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்த பூமி மற்றும் ஆஷா என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதில் பூமி மீது ஏற்கனவே கிரிமினல் வழக்குகள் காவல் நிலையத்தில் பதிய பட்டிருப்பதும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
Two persons arrested for possession of cannab