ஆடுகளை கைது செய்து காவல் நிலையத்தில் கட்டிய துயரம்!
two goats arrested in telangana
மரக்கன்றுகளை தின்றதாக இரண்டு ஆடுகளை கைது செய்து தெலங்கானா காவல்நிலையத்தில் கட்டி வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரிதா ஹரம் திட்டம் என்று மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக தெலங்கானாவில் உள்ள ஹுசராபாத் அருகே கரிம்நகர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் படி நடப்பட்ட மரக்கன்றுகளை இரண்டு ஆடுகள் மேய்ந்து கொண்டிருப்பதை கண்ட தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், அவற்றை பிடித்து சென்று காவல் நிலையத்தில் கட்டி வைத்து புகார் அளித்தனர்.
தொண்டு நிறுவனத்தினர் அளித்த புகாரில் இந்த இரண்டு ஆடுகளும் சேர்ந்து 900 மேற்பட்ட மரக்கன்றுகளில், 250க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மேய்ந்து அழித்து விட்டது. அதுமட்டுமல்லாமல் திரும்ப திரும்ப இவ்வாடுகள் மரக்கன்றுகளை மேய்வதால் காவல் நிலையத்தில் கொண்டு வந்துவிட்டு சென்றனர்.
காவல் நிலைய வாசலில் இரண்டு ஆடுகளையும் மரக்கன்றுகளை தின்றதற்கு தண்டனையாக இரவு முழுவதும் கட்டி வைக்கப்பட்டன. இரண்டு நாட்கள் கழித்து ஆடுகளின் உரிமையாளர் கும்மரிவாட பகுதியைச் சேர்ந்த டோர்னகொண்ட ராஜய்யாவை அழைத்து வந்து ரூபாய 1000 அபராதமும், மீண்டும் இப்படி ஆடுகளை அவிழ்த்து விடக்கூடாது எனவும் எச்சரித்து ஆடுகளையும் உரிமையாளரையும் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
English Summary
two goats arrested in telangana