திரிபுராவில் அடுத்த பெண் கற்பழித்து..எரித்து கொலை.! அதிர்ச்சியில் பொது மக்கள்.!  - Seithipunal
Seithipunal


ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் மற்றும் உன்னாவில் இளம்பெண் ஆகியோர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்த சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த இரு சம்பவங்களின் அதிர்ச்சியிலிருந்து வெளிவராத நமக்கு அடுத்தது ஒரு அதிர்ச்சி சம்பவமாக திரிபுராவில் 17 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்து இருக்கின்றது. 17 வயது சிறுமி ஒருவர் சமூக வலைதளத்தின் மூலம் அஜய் என்பவருடன் பழகி வந்துள்ளார்.

இந்த நட்பு காதலாக மாறிய பொழுது ஆசை வார்த்தைகளை கூறி காதலன் அந்த சிறுமியை சாந்தி பஜார் என்ற பகுதிக்கு அழைக்க சிறுமியும் அவருடன் சென்று தங்கியுள்ளார். அப்போது நண்பர்களை உடன் அழைத்து இரண்டு மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். அந்த சிறுமியின் உடல் நலம் மிகவும் பாதிக்கப் பட்டதால் பின்னர் அவரை உயிரோடு எரித்து கொலை செய்திருக்கின்றனர்.

இதையடுத்து அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அஜயை கைது செய்து மற்ற நண்பர்களை தேடி வருகின்றனர். 17 வயது சிறுமி இரண்டு மாதங்களாக வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மட்டுமின்றி இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TRIPURA GIRL ABUSED BY LOVER


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->