நாளை நடக்க உள்ள ஆலோசனை கூட்டம்! தமிழக முதல்வர், பிரதமர் மோடி பங்கேற்பு!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வண்ணம் உள்ளது. நாளொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் இந்தியாவில் கண்டறியப்படுகிறது. அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்து 62 ஆயிரத்து 664 ஆக உள்ளது. இதிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 44 லட்சத்து 97 ஆயிரத்து 867 ஆக உள்ளது. இதன் காரணமாக கொரோனவிலிருந்து மீண்டவர்கள் சதவீதம் 80.86 ஆக உள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், 7 மாநிலங்கள் மட்டுமே உள்ளன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை இந்த 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதலமைச்சர்கள் உடன் ஆலோசனை நடத்த உள்ளார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்திரபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் மற்றும் சுகாதார மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TOMORROW PM MODI MEETING WITH 7 STATE CM


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->