ரயில் கழிவறையின் தண்ணீரை பயன்படுத்தி இட்லி சமைத்து விற்பனை?! வெளியான அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


மும்பை போரிவேலி ரயில்நிலையம் அருகே இட்லி கடை வைத்திருக்கும் கடைக்காரர், தனது கடையில் இட்லி வேகவைப்பதற்க்காக ரயில் நிலையத்தில் உள்ள கழிவறையில் இருந்து தண்ணீரை ஒரு கேனில் பிடித்து செல்கிறார். அதனை பொதுமக்களில் ஒருவர் படம்பிடித்து  நிலையில் அவருடன் சாதாரணமாக பேசியபடி அதே நீரை பிடித்து செல்கிறார். இந்த  நீரை கொண்டு அவர் சமைத்து அந்த பகுதியில் விற்று வந்துள்ளார்.

ரயில் கழிவறையில் கேனில் பிடித்து சென்ற வீடியோ இணையத்தில் தீயாக பரவியது, இதனையடுத்து மும்பை உணவு மற்றும் மருந்துகள் மேலாண்மை அமைப்பு இது தொடர்பாக விசாரணைக்கு விசாரணை நடத்த உத்தரவுயிட்டது. மேலும் உணவு மற்றும் மருந்துகள் மேலாண்மை அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் இது போன்ற செயல்கள் மக்களின் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் செயல். வீடியோவில் இருக்கும் நபர் யார் எனத் தேடி வருகிறோம். அந்த நபர் கிடைத்தவுடன் அவரிடம் உணவகம் நடந்த லைசன்ஸ் இருக்கிறதா என்பதை முதலில் பரிசோதித்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன் ரயிலில் டீ விற்பவர்கள் கழிவறை நீரைப் பிடித்துப் உபயோகிக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

toilet water used for food preparation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->