திருநெல்வேலி இளைஞர், மும்பையில் தற்கொலை.. பணி உடல் வலி காரணமா?.. காவல்துறை விசாரணை.!
Tirunelveli Youngster Suicide in Mumbai Dharavi Police Investigation
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை காமராஜர் சால் பகுதியை சார்ந்தவர் நண்பன் துரை (வயது 24). இவர் லிப்ட் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே தோள்பட்டையில் ஏற்பட்ட வலியின் காரணமாக அவதியுற்று வந்துள்ளார்.
இது குறித்து தன்னுடன் தங்கியுள்ள நண்பர்களிடம் தெரிவித்த நிலையில், நேற்று காலை தூங்கப்போவதாக கூறிவிட்டு அறைக்குள் சென்றுள்ளார். வேலைக்கு சென்ற நண்பர்கள் மாலையில் வீட்டிற்கு வந்துள்ளனர். வெகுநேரம் கதவை தட்டியும் கதவை திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அவ்வாறு உள்ளே செல்கையில் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக துரை வாயில் நுரைதள்ளிய நிலையில் பிணமாக இருந்துள்ளார். இந்த விஷயம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விசாரணை செய்துள்ளனர்.
மேலும், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. துரையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கவே, அவரின் அலைபேசியை காவல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர்.
அந்த வீடியோவில், " எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை " என்று கூறியுள்ளார். இந்த விஷயத்தை தற்கொலை வழக்காக பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி மாவடி பகுதியை சார்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tirunelveli Youngster Suicide in Mumbai Dharavi Police Investigation