பச்சிளம் குழந்தையை அலட்சிய கொலை செய்து, அப்பட்டமாக நடித்த அரசு மருத்துவமனை.. கண்ணீரில் பெற்றோர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் திரிரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா நகரில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அனுமதியாகியிருந்த பெண்மணிக்கு, கடந்த 10 ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

இந்த பெண்மணிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில், பெண்மணிக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து கடந்த 12 ஆம் தேதி குழந்தைக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

இதில், குழந்தையின் மூக்கின் வழியாக டியூப் மூலமாக மாதிரிகள் சேகரிக்க, டியூப்பை மூக்கினுள் விடுகையில் அது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. பச்சிளம் குழந்தையின் மூக்கில் இருந்து இரத்தம் வெளியே வர துவங்கியுள்ளது. 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பவே, அவர்கள் குழந்தை நலமுடன் தான் இருக்கிறது என்று கூறி சமாளித்துள்ளனர். இதற்கு உள்ளாகவே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், குழந்தையின் இறப்பிற்கு மருத்துவர்களின் அலட்சியமே முதற்காரணம் என்று கூறிய பெற்றோர்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirpura govt hospital baby died police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->