விடுதியில் தங்கி, டிக்டாக் வீடியோ.! கவனித்த கணவன், கடுப்பாகி செய்த விபரீதம்.!
tiktok girl murdered by husband
ஆந்திர மாநிலத்தில் இருக்கும் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த நரசத்பேட் என்ற கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் என்பவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஸுவ்ரதா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி இருக்கின்றது. இந்நிலையில், இருவருக்கும் இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று இருக்கின்றது.
சுவர்தா டிக்டாக் வீடியோ போடுவதை வழக்கமாகக் கொண்டு இருக்கின்றார். இதன் காரணமாக கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஆனாலும், சுவர்தா வீடியோ போடுவதை நிறுத்திய பாடு இல்லை. மேலும் தன்னுடைய மகளுடன் சேர்ந்து ஹாஸ்டல் ஒன்றில் தங்கி கொண்டு அங்கிருந்து டிக்டாக்வீடியோ பதிவிட்டு வந்துள்ளார்.
இதனை கவனித்த வாலிபர் கடந்த 14ம் தேதி தன்னுடைய மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அதன்பின்னர் அவர் தன்னுடைய சகோதரர்டன் சேர்ந்து சுவர்தாவை 17ஆம் தேதி கொலை செய்து இருக்கின்றார். உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்து இருக்கின்றார்.
இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர், அந்த பெண் அணிந்திருந்த நகைகளை கொண்டு கொலை செய்யப்பட்டது சுவர்தா என்பதை கண்டுபிடித்து கொலை செய்த சகோதரர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
tiktok girl murdered by husband