மர்மநபர்களால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம்.! வெளியான நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி தகவல்!! - Seithipunal
Seithipunal


ஹரியானவை சேர்ந்தவர் மோகித் மோர்.இவர்  டெல்லியில் உள்ள நஜாஃப்கார் பகுதியில் தற்பொழுது வசித்து வந்தார்.மேலும் இவர் ஜிம் பயிற்சியாளராகவும் இருந்தார். மோகித் டிக் டாக் செயலியில் கலக்கலான ஏராளமான வீடியோக்களை வெளியிட்டுள்ளார் . மேலும் அவை வைரலான நிலையில் இதன் மூலம் பெருமளவில் பிரபலமான அவருக்கு  ஐந்து லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

இந்நிலையில் மோஹித் தான் வசிக்கும் பகுதியில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் நேற்று மாலை அமர்ந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் மோகித்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதில் மோகித் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மொஹித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்ட நிலையில் அங்கிருந்த சிசிடிவி வீடியோக்களை சோதனை செய்ததில் மோஹித்தை சுட்ட பிறகு 3 மர்ம நபர்களும் ஸ்டூடியோவை விட்டு வெளியேறும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

 மேலும் அவற்றில் இருவர் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். அதனால் அவர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மூன்றாவது நபர் மட்டும் எளிதாக அடையாளம் காணப்பட்டார்.

அவரைக் குறித்து  அந்த பகுதியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் மோஹித்தின் டிக் டாக் கணக்கு போன் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இச்சம்பவம் டிக்டாக் ரசிகர்களுக்கு  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tik tok famous shot dead


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->