மின்கட்டணம் வசூல் செய்ய சென்ற அதிகாரிகள்! கட்டிவைத்த மக்கள்! விரைந்த போலீசார்!
tied Electricity Department officials in Telangana
தெலுங்கானாவில் மின்சார கட்டணம் வசூல் செய்ய சென்ற இரண்டு அலுவலர்களை கிராம மக்கள் கட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் மேடக் பகுதிக்குட்பட்ட அல்லதுர்கம் காவல் எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அல்லதுர்கம் காவல் எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் மின்சார கட்டணம் வசூல் செய்வதற்கு மின்சார வாரிய அலுவலர்கள் சென்றுள்ளார்கள்.
மின்சார கட்டணம் வசூல் செய்ய சென்ற இரண்டு அலுவலர்களையும் கிராம மக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர். செய்தி அறிந்த அல்லதுர்கம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்டு விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மின்சார கட்டணம் வசூல் செய்யச் சென்ற அலுவலர்களை கிராம மக்கள் கட்டி வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக கட்டி வைத்தார்கள் என்பதற்கான காரணம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.
பின்னர் காவல்நிலையம் சென்ற அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், பல பிரிவுகளின் கீழ் அக்கிராம மக்கள் 5 பேருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என மேடக் டி.எஸ்.பி கிருஷ்ண மூர்த்தி தெரிவித்துள்ளார்.
English Summary
tied Electricity Department officials in Telangana