டிக் டாக் பெண் ஒருதலைக்காதலால் கொடூர கொலை.. நாடகக்காதல் காமுகனின் பகிரங்க வாக்குமூலம்..!!
Tic Tok Famous Haryana Shivani Murder by One side love
இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்தின் குந்தி பகுதியில் அழகுநிலையம் வைத்து நடத்தி வரும் பெண்மணி ஷிவானி. இவருடன் இணைந்து, இவரது நண்பர் நீரஜும் அழகு நிலையத்தை நடத்தி வருகிறார்.
இந்த சூழ்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்னதாக நீரஜின் அழகு நிலையத்தில் துர்நாற்றம் வீசவே, உள்ளே சென்று சோதனை செஇயக்கியில் ஷிவானி உடல் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் அழுகி இருந்துள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ஷிவானியின் அலைபேசி மாயமாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், ஆரிப் என்ற இளைஞர் கடந்த மூன்று வருடமாக ஷிவானிக்கு காதல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.
தொடர்ந்து பல வருடமாக ஆரிப், ஷிவானிக்கு காதல் தொல்லை அளித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்த புகாரில், ஏற்கனவே ஆரிப்பை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஆர்ப் அழகு நிலையத்திற்கு வந்ததாக ஷிவானி தனது சகோதரிக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்த நிலையில், ஷிவானியை கொலை செய்து ஆரிப் பல தில்லாலங்கடி வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
ஆரிப்பை கைது செய்து விசாரணை மேற்கொள்ளையில் கொலையை ஒப்புக்கொண்ட நிலையில், தனது காதலை ஏற்காது, தன்னை அவமதித்ததன் காரணமாக கொலை செய்ததாகவும் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். ஷிவானிக்கு டிக் டாக்கில் இலட்சக்கணக்கான பின்தொடர்பாளர்கள் உள்ள நிலையில், இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tic Tok Famous Haryana Shivani Murder by One side love