நெல்லையை சார்ந்த சி.ஆர்.பி.எப் வீரர் உட்பட மூவர் வீரமரணம்.. !! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இதில் பயங்கரவாதிகள் தரப்பிலும் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய பாதுகாப்பு படையினர்  தரப்பிலும் வீரமரணம் அடைந்துள்ளனர். 

இந்த நிலையில், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள குப்பவாரா மாவட்டத்தில் இருக்கும் கிரால்குண்ட் வங்க காசியாபாத் பகுதியில் சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளனர். 

இந்த நேரத்தில், அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தவே, மூன்று வீரர்கள் சம்பவ இடத்திலேயே வீரமரணம் அடைந்துள்ளனர். இதில் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த 31 வயதுடைய சந்திரசேகர் என்ற இராணுவ வீரரும் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirunelveli native CRPF officer died in terrorist attack


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->