கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண்.! - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலன் கழுத்தை இறுக்கி பெண் கொலை செய்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்திர பிரதேசத்தை சேர்ந்த கங்கேஷ் மற்றும் அவரது மனைவி ரீனா ஆகிய இரண்டு பேரும் பெங்களூருவில் வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இதையடுத்து கங்கேஷ் உத்தரபிரதேசத்திற்கு சென்றுள்ளார். இதனால் கடந்த சில மாதங்களாக ரீனா மட்டும் தனியாக பெங்களூருவில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ரீனாவிற்கும், நிபாஸ் என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதில் ரீனாவுடன் உல்லாசமாக இருப்பதை நிபாஸ் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டுள்ளார்.

மேலும் ரீனாவை விபச்சாரத்திற்குள் தள்ள முயன்று ரீனாவிற்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ரீனா தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெங்களூருக்கு வந்த கங்கேஷ், நிபாசிட் கொலை செய்ய முடிவு செய்து அவரை வீட்டிற்கு வரவழைத்தார்.

இதையடுத்து வீட்டிற்கு வந்த நிப்பாசுக்கு ரீனா உணவில் போதை பொருளை கலந்து கொடுத்துள்ளார். இதை சாப்பிட்ட நிபாஸ் மயங்கிய நிலையில், அவரது கழுத்தை துண்டால் இறுக்கி ரீனாவும், கங்கேசும் கொலை செய்துள்ளனர். பின்பு நிபாசின் உடலை சாலையில் வீசியுள்ளனர்.

இதை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், டெபாசிட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நிபாசை கொலை செய்த கணவன் மனைவி மற்றும் இவர்களுக்கு உதவிய பிஜோய் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The woman who murder the illegal boyfriend along with her husband in bangalore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->