கடன் விண்ணப்பத்தை நிராகரித்த மேலாளர்.. கோபத்தில் தீ வைத்த நபர்..! - Seithipunal
Seithipunal


கடன் தரவில்லை என வங்கிக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், ஹாவேரி  மாவட்டம், ஹெடிகொன்டா  வசித்து வருபவர் வசிம் முல்லா (33) . இவர் அந்த பகுதியில்  உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால், இவரது விண்ணப்பித்தை பரிசீலனை செய்த மேலாளர் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அவர் வங்கி கண்ணாடிகளை உடைத்து வங்கிக்குள் நுழைந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில், வங்கியில் இருந்த பெரும்பாலான பொருட்கள், பத்திரங்கள் ஆகியவை தீயில் கருகி நாசமாகின.

இதனை அடுத்து, தப்பி ஓட முயன்ற முல்லாவை விரட்டி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The person who set the bank on fire for not giving credit


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->