சமூகவலைதளத்தில் திருமண கோரிக்கை...!! ஏற்க மறுத்த பெண்ணுக்கு பீட்சா ஆர்டர் செய்து நூதன தொல்லை...!! - Seithipunal
Seithipunal


சமூகவலைதளத்தில் திருமணம் வேண்டுகோளை நிராகரித்த பெண்ணுக்கு நூதன முறையில் தொல்லை கொடுத்து வரும் மர்ம நபர்.

கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள இளம்பெண் ஒருவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் மர்ம நபர் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். ஆனால் அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண்ணின் பெயருக்கு பீட்சா ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாக கூறி பீட்சா வந்துள்ளது. ஆனால் அந்த பெண் பீட்சாவை ஆர்டர் செய்தது தான் இல்லை என்று கூறினார் இருப்பினும் பணம் கொடுத்து அந்த பீட்சாவை பெற்று கொண்டார்.

இதனை தொடர்ந்து அவரின் அலுவலகம், வீடு என தொடர்ந்து அவரின் பெயரில் பீட்சா வந்துள்ளது. இதனால் அவர் குழப்பமடைந்தார். இந்நிலையில் அவரின் சமூகவலைதளத்திற்கு அந்த மர்ம நபர் மற்றொரு குறுந்தகவலை அனுப்பினார்.

அதில் “ நான் தான் பீட்சா ஆர்டர் செய்கிறேன் என்னை திருமணம் செய்யவில்லை எனில் தினமும் இப்படி தொல்லை செய்வேன். உங்களை கண்காணிக்க ஆள் வைத்துள்ளேன் எனவும் கூறியுள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து அந்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The mysterious person who sent the pizza to the woman who refused to marry and harassed her


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->