ஆந்திர மாநிலத்தில் கார் டையர் வெடித்து எதிரே வந்த லாரி மீது மோதி தீ விபத்து! 3 பேர் பலி.!
The car tire exploded and caught fire
ஆந்திர மாநிலத்தில் டையர் வெடித்தில் கார் எதிரே வந்த லாரி மீது தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
திருப்பதி அருகே பாக்ராபேட்டை பகுதியை சேர்ந்த இம்ரான்கான் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 3 பேர் காரில் ஸ்ரீசைலத்திற்க்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் திப்பைப்பாலம் கிராமம் அருகே திடீரென்று காரின் டயர் வெடித்து எதிரே வந்த லாரி மீது மோதியுள்ளது.
இதனால் டீசல் டேங்கில் தீ பிடித்து கார் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்து உள்ளது. இந்த தீ விபத்தில் காரில் சென்ற மூன்று பேரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்து உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
The car tire exploded and caught fire