சுரங்கபாதையில் தேங்கி இருந்த மழைநீர்... குளிக்க சென்ற சிறுவர்களுக்கு நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


சுரங்கபாதையில் தேங்கி  இருந்த மழைநீரில் மூழ்கி சிறுவர்கள் பலியான  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், சேர்ந்தனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு விக்னேஷ் (8) என்ற மகன் இருக்கிறார். விக்னேஷ் அந்த பகுதியில் உள்ள தொடக்க பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், விக்னேஷ் பக்கத்து வீட்டு சிறுவனான தர்ஷன் (5) என்பவருடன் சைக்கிளில் ஏற்றி விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

அவர்கள் தண்ணீரில் விளையாடு கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கினர். விளையாட சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் வரததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் அவர்களை தேடியுள்ளனர்.

இருவரும் சுரங்கபாதையில் சடலமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The boys drowned in the rain water that was stagnant in the tunnel and the boys were killed


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->