காதல் மனைவியை அடித்தே தற்கொலை செய்ய வைத்த கணவன்.. வாயில்லா ஜீவனின் பாசம்... நெஞ்சை உலுக்கிய வீடியோ.!!
Telangana wife suicide due to husband torture cctv footage released facebook
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரல்லகுவா பகுதியில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் லாவண்யா லஹரி. இவர் முகநூல் மூலமாக தனது கணவரால் அரங்கேறும் சித்ரவதைகள் குறித்து வீடியோ காட்சிகளை வெளியிட்டு தற்கொலை செய்துள்ளார்.
மேலும், இது குறித்த வீடியோ காட்சியில் லாவண்யாவை அவரது கணவர் வெங்கடேஷ்வரலு கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், வெங்கடேஷ் லாவண்யாவை கடுமையாக தாக்குவது மற்றும் லாவண்யாவை காப்பாற்றும் நோக்கில் அவரது வீட்டில் உள்ள நாயும் தனது பாசத்தை வெளிப்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
கணவனால் கடுமையாக தாக்கப்பட்ட பெண்மணிக்கு வயிற்று பகுதியில் அதிகளவு வலி ஏற்பட்டதை அடுத்து, வயிற்றில் கைவைத்தார் படியே நடக்கமுடியாமல் நடந்து வருகிறார். மேலும், லாவண்யாவின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் இந்த வீடியோவை பார்த்து நேரில் வீட்டிற்கு செல்கையில், லாவண்யா பிணமாக தூக்கில் தொங்கியுள்ளார்.
மேலும், கடந்த 2012 ஆம் வருடத்தில் ஏர்லைன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வெங்கடேஷை காதல் திருமணம் செய்து கொண்ட லாவண்யா, குழந்தை இல்லாத காரணத்தால் கணவன் மற்றும் அவனது வீட்டாரால் உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Telangana wife suicide due to husband torture cctv footage released facebook