நாகெட்ட ஜோஷியால் குழந்தையை தாய் கொலை செய்த பயங்கரம்.. நரபலி பெயரில் விபரீதம்.!
Telangana Mother Killed Own baby Name of Human sacrifice
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நரபலி கொடுக்கும் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், 6 மாத குழந்தையை பெற்ற தாய் நரபலி கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சூர்யாபேட்டை பகுதியைச் சார்ந்தவர் புஜ்ஜி. இந்த பெண்ணிற்கு பிறந்த 6 மாதமே ஆன பெண் குழந்தை இருக்கிறது. கிருஷ்ணாவின் இரண்டாவது மனைவியான புஜ்ஜி, கடந்த 6 மாதங்களாகவே தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில், ஜோசியர் ஒருவர் புஜ்ஜிக்கு நாக தோஷம் இருப்பதாக கூறியுள்ளார். இதற்காக பூஜையை செய்யச்சொன்ன நிலையில், கடந்த 6 மாத காலமாக புஜ்ஜி இரவு நேர பூஜை செய்துவந்த வந்துள்ளார்.
இந்த பூஜை நிறைவாக, சிவன் படத்தின் முன் குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும் என்று ஜோசியன் கூறவே, தனது குழந்தையை நேற்று நரபலி கொடுத்துள்ளார். அக்கம்பக்கத்தினர் நீண்ட நேரம் கதவை தட்டியும், புஜ்ஜி கதவை திறக்காததால் சந்தேகமடைந்த உறவினர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
இதன்போது, குழந்தை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. பதறிப்போன பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து புஜ்ஜியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Telangana Mother Killed Own baby Name of Human sacrifice