மருத்துவமனை அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த நபர்.. தெலுங்கானாவில் அதிர்ச்சி.!!
Telangana man died corona due to irresponsible Hospital team
இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்ற 34 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் இறப்பதற்கு முன்னதாக சிகிச்சையில் அலட்சியம் இருப்பதாக தனது தந்தைக்கு விடியோவை அனுப்பி வைத்துள்ளார்.
இது குறித்த வீடியோவில், என்னால் சுவாசிக்க இயலவில்லை. 3 மணிநேரமாக மருத்துவமனை நிர்வாகிகளிடம் இது குறித்து கூறியும் என்னை கண்டுகொள்ளவில்லை. எனது இதயத்துடிப்பு நின்றுவிட்டது. நுரையீரல் இயங்குகிறது. நான் சென்று வருகிறேன் அப்பா என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகியுள்ள நிலையில், மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. மேலும், கடந்த 24 ஆம் தேதியன்று அவருக்கு கொரோனா உறுதியானது. சுவாச பிரச்சனை இருந்ததால் அவருக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டது என்றும், திடீரென மாரடைப்பின் காரணமாக அவர் இறந்துவிட்டார் என்றும் தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Telangana man died corona due to irresponsible Hospital team