உறவினரின் உடலை ஆட்டோவில் அலட்சியமாக எடுத்து செல்லும் கொடூரம்.. பகீர் தகவல்.!!
Telangana corona death patient body take him relation travel auto
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நபர்களின் உடலை அடக்கம் செய்ய மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையிலும் பல அவல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இயலாமல் இருந்து வரும் சூழலில், நாளொன்றுக்கு 20 ஆயிரம் பேர் பாதிக்கப்படடுகின்றனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 850,358 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 22,687 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பலியான நபர்களின் உடல்களை நெருங்கிய உறவினர்கள் தவிர்த்து பிற நபர்கள் பார்க்க அனுமதி இல்லை.. மேலும், உடல்களை தொட கூட அனுமதி கிடையாது. பாதுகாப்பு கவசம் அணிந்த அவசரஊர்தி ஊழியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் நல்லடக்கம் செய்வார்கள்.
இந்த நிலையில், சில இடங்கள் கொரோனாவால் உயிரிழந்த நபர்களின் உடல்கள் அலட்சியத்துடன் தூக்கி வீசுவதும், ஜே.சி.பி இயந்திரத்தின் மூலமாக உடலை குழிக்குள் போடுவதும் என பல வீடியோ காட்சிகள் வெளியானது. இதனைப்போன்று மற்றொரு கொடூரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி உயிரிழந்த நிலையில், அவரது உடலை ஆட்டோவில் கொண்டு செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக நிஜாமாபாத் மருத்துவமனை அதிகாரி தெரிவிக்கையில், " இறந்தவரின் உறவினர் மருத்துவமனையில் பணியாற்றி வரும் நிலையில், அவரது உறவினரின் உடலை எடுத்து செல்வதாக தெரிவித்தார். அவசர ஊர்தி ஏற்பாடு செய்திருந்தும், அதன் வருகைக்கு காத்திருக்காமல் அவர் உடலை எடுத்து சென்றுவிட்டார் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Telangana corona death patient body take him relation travel auto