கைக்குழந்தைக்கு பால் வாங்கி வருவதாக தூக்கி சென்று அரங்கேறிய கொடூர கொலை.. உறவினரின் விஷம செயல்.!!
Telangana child boy murder
நிஜாமாபாத்தில் 8 மாத கைக்குழந்தையை கொடூர கொலை செய்துள்ள சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் பகுதியை சார்ந்த தம்பதி மகிழ்வுடன் வசித்து வந்தனர். இவர்களுக்கு 8 மாத கைக்குழந்தை இருக்கிறது. இந்த குழந்தை தாயின் அரவணைப்புடன் அன்போடு வளர்க்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், இவர்களின் இல்லத்திற்கு சம்பவத்தன்று நெருங்கிய உறவினர் வந்துள்ளார். குழந்தையுடன் சிறிது நேரம் விளையாடிக்கொண்டு இருந்த உறவினர், குழந்தைக்கு கடைக்கு சென்று பால் வாங்கி வருவதாக கூறியுள்ளார்.
மேலும், கைக்குழந்தையையும் கடைக்கு கொண்டு சென்ற நிலையில், நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த காவல் துறையினருக்கும், குழந்தை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Telangana child boy murder