மலை வாழ் மக்களுடன் நடனமாடிய தெலங்கானா மாநில ஆளுநர்.!  - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மலை வாழ் மக்களுடன் இணைந்து நடனமாடிய வீடியோ வெளியாகியது.

ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் தமிழிசை சௌந்தரராஜன் மலைவாழ் மக்கள் நலத் துறை சார்பில் செய்யப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது ஐஐடி ,என்ஐடி , சிவில் சர்வீஸ் போன்ற துறைகளில் மலைவாழ் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விரைவில் மலைவாழ் மக்கள் உள்ள பகுதியில் ஒரு நாள் தங்கி அவர்களின் சம்பிரதாய கலாச்சாரங்களை தெரிந்து கொள்வேன் எனக் கூறிய தமிழிசை பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த கோய மற்றும் லம்பாடி மலைவாழ் மக்களுடன் கைகளை கோர்த்து நடனம் ஆடினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai dance with malaivaazh makkal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->