6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட தாஜ்மகால்.! முதலில் உள்ளே சென்றது யார் தெரியுமா?!
taj mahal open after 6 month
கொரோனா வைரஸ் தொற்று பரவியதன் காரணமாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், தமிழகத்தில் சில தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹால் உள்ளிட்ட பல முக்கிய சுற்றுலாத் தலங்களும் இதில் அடங்கும். தற்போது அன்லாக் செயல்முறை துவங்கியுள்ள நிலையில், நேற்று தாஜ்மஹால் திறக்கப்பட்டது.
அதிகாலை 5.30 மணிக்கு தாஜ்மகாலை சுற்றி பாக்க முதல் நபராக சீன நாட்டைச் சேர்ந்த நபர் தனது பெயரை பதிவு செய்து இருக்கின்றார். தாஜ்மஹால் திறந்ததும் முதல் ஆளாக ஒரு சீனர் உள்ளே சென்றிருப்பது ஆச்சரியமாக பேசப்பட்டு வருகின்றது.
ஒரு நாளைக்கு 5000 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்க முடிவு செய்து தாஜ்மகாலை பார்க்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
English Summary
taj mahal open after 6 month