இளம்பெண்ணிடம் 7 பேர் பாலியல் தொல்லை.,மொபைல் போனை ஹேக் செய்த கொடூரம்., இறுதியில் நேர்ந்த துயரம்.!
suicide for sexual harassment in office by 7 members
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலதில் போபால் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், ஹைதராபாத்தில் உள்ள 'பெல்' நிறுவனத்தில் 'கணக்கு அலுவலராக' (Accounts Officer) வேலை செய்து வந்துள்ளார். 33 வயதான இவர் வியாழக்கிழமை மியாப்பூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார்கள். இதன் விளைவாக முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியானது.
அலுவலகத்தில் பெண் அதிகாரி ஒருவருக்கு அவருடன் பணிபுரியும் உயர் அதிகாரிகள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்கள். துணை பொது மேலாளர் (நிதி) மற்றும் உடன் வேலை செய்யும் சக அதிகாரிகள் 6 பெரும் பெண் அதிகாரியிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக தெரிய வருகிறது.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகையில், பெண் அதிகாரி தனியாக இருந்தபோது தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே இருந்த குடும்பத்தினர், வீட்டிற்கு வந்து பார்த்த போது அவர் உயிருடன் இல்லை.
மேலும், தற்கொலை செய்துகொண்ட பெண் அதிகாரி ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார். அவர் எழுதியிருந்த கடிதத்தில் அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் டிஜிஎம் மற்றும் அவருடன் பணிபுரியும் 6 சக அதிகாரிகள், பெண்ணின் கைப்பேசியை ஹேக் செய்து வைத்துக் கொண்டு அவருக்கு வரும் மொபைல் கால் மற்றும் மெஸேஜ் வைத்து அவரை மிரட்டி வந்ததாகவும் கடிதத்தில் எழுதியிருந்தார். மேலும் அவர்களில் சிலர் அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து பெண் அதிகாரியின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படியில் மேற்குறிப்பிட்ட பொது மேலாளர் உள்ளிட்ட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
English Summary
suicide for sexual harassment in office by 7 members