லஞ்சமாக 2 பாலிவுட் நடிகைகளை அமைச்சர் கேட்டால்...!!? சூட்டை கிளப்பிய சு.சுவாமி ட்விட்...!!
subramaniyan swamy tweet against corruption
புதுடெல்லி : தற்போது நடைபெற்று வரும் ஊழல் வழக்கு ஒன்றிற்காக லஞ்சமாக 2 பாலிவுட் நடிகைகளை அமைச்சர் கேட்டால் என்ன தண்டனை என்பது தொடர்பாக தாம் ஆராய்ந்து வருவதாக பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ராஜ்யசபா எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளதாவது:
ஒரு தொழில் திட்டத்திற்கு ( பிராஜெக்ட்டுக்கு ) அனுமதி கொடுப்பதற்கு அமைச்சர் ஒருவர் லஞ்சமாக 2 பாலிவுட் நடிகைகளை கேட்டால் என்ன தண்டனை கிடைக்கும்?இது குறித்து தற்போது ஊழல் தடுப்பு சட்டத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.
இதற்க்கு ஏதேனும் ஆலோசனைகள் இருக்கிறதா?தற்போது நடைபெற்று வரும் ஊழல் வழக்கு ஒன்றுக்கு தேவைப்படுகிறது.இவ்வாறு சு.சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரணகலத்தை ஏற்படுத்தியுள்ளார்.
English Summary
subramaniyan swamy tweet against corruption