பாஜகவை சேர்ந்தவரை கன்னத்தில் அறைந்த 25 வயது சப் கலெக்டர்..! சமூக வலைதளங்களில் உலவும் வீடியோ..! - Seithipunal
Seithipunal


த்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சி.ஏ.ஏ. வுக்கு ஆதரவு போராட்டத்தில், பாஜகவைச் சேர்ந்த ஒருவரை கன்னத்தில் அறைந்ததன் மூலம் ஒரே நாளில் சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருபவர் தான் பிரியா வர்மா.    

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் இந்தூர் மாவட்டத்தின் மங்காலியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா வர்மா. இவருக்கு சிறுவயது இருக்கும் போதே மாவட்ட ஆட்சியராக வரவேண்டும் என்று லட்சியம் இருந்தது, அந்த கனவுகளுடன் தான் படித்துவந்தார். 

அதன் பின்னர் அவரது விடா முயற்சியின் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு உஜ்ஜைன் மாவட்டத்தில் இருக்கும் பைரவ்கர் சிறைச்சாலையில் சிறை அதிகாரியாக நியமிக்கப்பட்டு அவரது பணியை தொடரந்தார். 

இதை தொடர்ந்து, 2015-ம் ஆண்டு அதே மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அவரது 21 வயதில் பிரியா வர்மா மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அவரது திறமையால், தற்போது ராஜ்கர் மாவட்டத்தின் துணை ஆட்சியராகப் பணியாற்றி வருகிறார். இந்த சிறுவயதிலேயே மிகப்பெரிய இடத்திற்கு வந்த பிரியா வர்மா, அவரது அதிரடி நடவடிக்கைகளால் சமீபகாலமாகவே சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sub collector priya verma


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->