இருளில் மூழ்கிய தேர்வு மையம்... காரின் முகப்பு விளக்கால் தேர்வெழுதிய மாணவர்கள்.. பீகாரில் நடந்த அவலம்..!
Students suffer due to lack of electricity at Bihar Examination Center
காரின் முகப்பு விளக்கும் வெளிச்சத்தில் தேர்வெழுதிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், கிழக்கு சம்பரான் பகுதியில் உள்ள தேர்வு மையத்தில் 12ம் வகுப்புக்கான இடைநிலை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மையத்திற்கு வினாத்தாள்கள் தாமதமாக வந்துள்ளது.
மேலும், தேர்வு மையத்தில் போதிய வெளிச்சம் இல்லை என கூறப்படுகிறது. அந்த மையத்தில் மின்சாரம் மற்றும் ஜெனரேட்டர் வசதி இல்லாததால் மாணவர்கள் தேர்வெழுத்த மறுத்தனர்.
இந்நிலையில், அங்கு நின்று கொண்டிருந்த காரின் முகப்பு விளக்கை எரியவிட்டபடி தேர்வு நடைபெற்றது. இந்த சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Students suffer due to lack of electricity at Bihar Examination Center